தொடர்புடைய செய்திகள்
- 22 பேருடன் புறப்பட்ட விமானம் மாயம்! – நேபாளத்தில் பரபரப்பு!
- விமானத்திற்குள் குட்கா கறை: ஐ.ஏ.எஸ் அதிகாரி பகிர்ந்த புகைப்படம்!
- ஒமிக்ரான் BA.4 கொரோனா: தமிழ்நாட்டில் ஒருவருக்கு உறுதி
- திட்டமிட்டே விபத்துக்குள்ளான விமானம்..! கருப்புப் பெட்டியில் சிக்கிய பகீர் தகவல்!
- நேபாளத்தில் இருந்து திரும்பியதும் முதல்வருடன் இரவு உணவு சாப்பிடும் பிரதமர்!
மாயமான நேபாள விமானம் கண்டுபிடிப்பு: 22 பேர்களின் நிலை என்ன?
இன்று காலை நேபாள விமான நிலையத்திலிருந்து கிளம்பிய விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இன்று காலை 9 மணிக்கு நேபாளத்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் 19 பயணிகள் மற்றும் மூன்று ஊழியர்கள் இருந்தனர். இந்த விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் தொடர்பு கட்டுப்பாட்டை இழந்தது
இதனை அடுத்து இந்த விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் நேபாளத்தில் மாஸ்டாங் அருகே கோவாங் என்ற பகுதியில் மாயமான விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து மீட்புக் குழுவினர் விமானம் இருக்கும் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
விமானத்தின் முழுமையான நிலைமை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
