தொடர்புடைய செய்திகள்
- 40 அரசியல் கட்சிகளும் கலைப்பு; தேர்தலில் போட்டியிடுவது யார்? – மியான்மரில் அதிர்ச்சி!
- இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது மேலும் புதிய வழக்குப் பதிவு
- இம்ரான்கானை கைது செய்ய களமிறங்கிய ராணுவம்.. பாகிஸ்தானில் பதட்டம்..!
- பீரங்கி குண்டு வீசவில்லை! பொதுமக்கள் உயிரிழந்த விவகாரத்தில் ராணுவம் விளக்கம்!
- ராணுவத்தினர் நடத்திய பயிற்சி.. இலக்கு தவறி வீட்டில் விழுந்த வெடிகுண்டால் 3 பேர் பலி..!
பாலஸ்தீன படைகள் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்!
லெபனானில் இயங்கி வரும் பாலஸ்தீன படைகள் மீது இன்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில், பாலஸ்தீன நாட்டில் காசா முனை ஹமாஸ் அமைப்பில் உள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை பாதுகாப்பு காரணங்களாக இஸ்ரேல் நாடு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
இங்கு, இஸ்ரேலின் சில பகுதிகள் உள்ள நிலையில், இங்கு இஸ்ரேலிய ராணுவப் படை மற்றும் பாலஸ்தீன ராணுவத்திற்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஜெருசலேத்தில் உள்ள மசூதி ஒன்றில் முஸ்லீம்கள் தொழுகையின்போது, இஸ்ரேல் திடீரென்று தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக, லெபனான் நாட்டின் பாலஸ்தீன ஆயுதப்படையினர், இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகள் வீசினர்.
இந்த நிலையில், இன்று காலை இஸ்ரேல் படையினர், பாலஸ்தீன ஆயுதப்படையினர் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
