1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Indonesia prison fire accident

சிறைச்சாலையில் திடீர் தீ விபத்து; அலறி ஓடிய கைதிகள்! – 41 பேர் பலியான சோகம்!

Indonesia
இந்தோனேஷியாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை அறைகளுக்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பலர் வெளியேற முடியாமல் சிக்கி உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர்.

இந்த கொடூர விபத்தில் சிறை கைதிகள், காவலர்கள் உட்பட 41 பேர் சோகமாக பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம்; 208 பேர் மீது புகார்! – ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை!