1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 19 மே 2022 (18:32 IST)

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: இந்தோனேசிய அதிபர்

Oils
பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்படுவதாக இந்தோனேசிய அதிபர் அறிவித்துள்ளதை அடுத்து இந்தியாவில் பாமாயில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கடந்த சில மாதங்களாக பாமாயில் விலை கடும் விலை ஏற்றம் கண்டது என்பது கிட்டத்தட்ட கடலை எண்ணெய்  விலைக்கு பாமாயில் நிலை வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதற்கு முக்கிய காரணமாக பாமாயில் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதியை நிறுத்தியது. இந்த நிலையில் தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பு உள்ளதால் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கப் பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிபர் தெரிவித்துள்ளார்
 
இதனால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பாமாயில் விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது