1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Emergency in Srilanka again

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்!

Srilanka
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதை அடுத்து அந்நாட்டில் தொடர்ச்சியாக மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது 
 
இந்த நிலையில் இலங்கையில் தற்போது மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பொதுமக்கள் போராட்டம் இலங்கையில் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் நேற்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளதாக இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது 
 
இலங்கை அதிபர் மாளிகையையும் பிரதமர் மாளிகையையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திமுக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவு - கொண்டாட்டத்தில் கழகத்தினர்!!