1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (08:27 IST)

இங்கிலாந்தில் கொரோனா மூன்றாவது அலை அறிகுறிகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்!

இங்கிலாந்தில் இப்போது மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வாளர்கள் அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் அங்கு கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் இப்போது அந்த நாட்டில் கொரோனா மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா மூன்றாம் அலை மற்ற இரண்டு அலைகளை விட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் பிரிட்டனில் ஜூன் 21 ஆம் தேதி முதல் கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஆய்வாளர்கள்