வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 அக்டோபர் 2020 (10:09 IST)

புருணை நாட்டு இளவரசர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்!

புருணை நாட்டு இளவரசர் அஜிம் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.

புரூணை நாட்டு சுல்தானின் வாரிசு இளவரசர் அஜிம். இவருக்கு 38 வயதாகிறது. இவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் இப்போது சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளார். இதனை அந்நாட்டு அரசு, தேசிய வானொலியில் அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த இளவரசர் பிரின்ஸ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அஜிம் யூ ஆர் நாட் யூ மற்றும் தி ஹேப்பி பிரின்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை அவர் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.