ஞாயிறு, 1 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (14:32 IST)

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு - 2 பேர் பலி

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு - 2 பேர் பலி
இலங்கையில் மீண்டும் 7வதாக நடைபெற்றுள்ள குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈஸ்டர் தினமான இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல் உள்ளிட்ட 6 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. இதில் மக்கள் 100க் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு - 2 பேர் பலி
 
அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே தற்போது மீண்டும் தெஹிவளை எனும் இடத்தில் உள்ள ஹோட்டலில் பயங்கர சத்தத்துடன் குண்டிவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இச்சம்பவம் இலங்கை மக்களை பீதியுல் ஆழ்த்தி உள்ளது.