1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. A School HM was arrested in abuse case

ஒரு ஸ்கூல் ஹெச்.எம் செய்யுற வேலையாடா இது?

பாகிஸ்தான்
பாகிஸ்தானில் பள்ளி முதலவர் ஒருவன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 105 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானில் அத்தாவுல்லா மார்வத் என்பவர் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் அந்த பள்ளியில் முதல்வராகவும் இருந்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவன் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளான்.
 
இதுகுறித்து விளக்கமளித்த அவன் இது ஒரு சாதாரண விஷயம் என அசால்ட்டாக பேசினான்.
 
இதுசம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த அயோக்கிய முதல்வருக்கு 105 ஆண்டு ஜெயில் தண்டனையும்  ரூ.14 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
அடுத்த கட்டுரையில்
24 மணி நேரத்தில் பருவமழை: முதல் 2 நாட்கள் படு ஜோர்!