1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. A earth quake in afghanistan,

தாலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி!

ஆப்கானிஸ்தான்
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட நாடு முழுவதுமே தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்பதும் இதனால் விமான நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து பெரும் அச்சத்தில் உள்ள மக்களுக்கு மேலும் ஒரு சோதனையாக இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
 
ஆப்கன் நாட்டில் உள்ள ஃபேசாபாத்திலிருந்து தென்கிழக்கு பகுதியில் 4.2 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசியல் குழப்பம் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கும் நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை!