தொடர்புடைய செய்திகள்
- 67.63 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 2300-க்கும் மேற்பட்டோர் பலி
- துருக்கியை அடுத்து சிரியா தலைநகரிலும் நிலநடுக்கம்.. அச்சத்துடன் ஓடும் பொதுமக்கள்..!
- துருக்கி-சிரியா நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டலாம் என அமெரிக்கா தகவல்!
- துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 1300 பேர் பலி என தகவல்!
துருக்கி பூகம்பம்.. 4000 பேர் பலி, பனியால் மீட்புப்பணிகள் தாமதம்..!
நேற்று அதிகாலை துருக்கியில் நிகழ்ந்த பூகம்பம் காரணமாக சுமார் 4000 பேர் பலியாகி உள்ளதாகவும் ஆயிரக்கணக்கான பேருக்கு படுங்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிரியா மற்றும் துருக்கி ஆகிய இரண்டு நாடுகளில் நேற்று அடுத்தடுத்து மூன்று பூகம்பங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பூகம்பத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ நெருங்கியதாகவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மீட்ப பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்காக 7 நாட்கள் தேசிய துக்கம் கடைபிடிக்கப்படும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. நேற்று நிகழ்ந்த பூகம்பம் துருக்கியின் அண்டை நாடுகளான ஈராக் எகிப்து உள்பட ஒரு சில நாடுகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் ஆனால் அந்த நாடுகளில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா மீட்பு பணிவுக்காக இரண்டு குழுக்களை அனுப்பி உள்ளதாகவும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
