தொடர்புடைய செய்திகள்
- விசிக ஒரு வன்முறை கட்சி: டாக்டர் ராம்தாஸ்
- ப சிதம்பரம் வீசிய கடைசி அஸ்திரம் - சிவகங்கைத் தொகுதி கிடைத்த பின்னணி !
- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தலே இருக்காது: எச்.ராஜா
- சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு! பாஜகவுக்கு ஒரு வெற்றி உறுதி!
- கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளராக அறிக்க வேண்டும் - சிவகங்கை காங்கிரஸார்
விசிக ஒரு வன்முறை கட்சி: டாக்டர் ராம்தாஸ்
அதிமுக கூட்டணியில் ஏழு மக்களவை தொகுதிகளை பெற்ற பாமகவின் ராம்தாஸ் தற்போது தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:
சிதம்பரத்தில் எதிரணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு அடையாளம் கொடுத்தது நான் தான். அந்த கட்சியின் கொடியை பார்த்தாலே தற்போது பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். விசிக ஒரு வன்முறை கட்சி.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்க மீண்டும் பிரதமர் மோடியிடம் மனு கொடுப்போம். கண்ணியமான முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றிய நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். பாமக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது.
மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்றும் ராம்தாஸ், அன்புமணி ஆகிய இருவரையும் காமெடியன்கள் என்றும் திமுக விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுத்த டாக்டர் ராமதாஸ், 'திமுக தேர்தல் அறிக்கையில் கதாநாயகன், கதாநாயகி என யாருமே இல்லை என்றும், காமெடியன் மட்டுமே உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
