1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (10:40 IST)

விவாகர்த்து அறிவிப்புக்குப் பின் முதல் முறையாக வெளியே வந்த சமந்தா!

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். சொல்லப்போனால் தனது கணவரை விட பிஸியான நடிகையாக இருந்தார்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவருக்கும் சைதன்யாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதை இப்போது இருவரும் உறுதி செய்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெளி உலகுக்கு தலைகாட்டாமல் இருந்த சமந்தா இப்போது வெளியே வர ஆரம்பித்துள்ளார். இது சம்மந்தமான அவரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.