1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (12:07 IST)

சென்னை அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்… கோச் பிளமிங் சொல்வது உண்மையா?

சிஎஸ்கே அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் படுமோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கான காரணம் குறித்து கோச் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி இந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியது. ஆனால் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதற்கான காரணமாக அணியின் முக்கியத் தூணாக உள்ள ரெய்னா மற்றும் ராயுடு ஆகியோர் இல்லாதது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தோல்வி குறித்து அணியின் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘துபாயின் பணிதான் எங்கள் அணியின் தோல்விக்கு முக்கியமாகக் காரணமாக உள்ளது, பனிக்கு ஏற்ற மாதிரி வீரர்களைக் களமிறக்க வேண்டும் என வீரர்களை மாற்றி மாற்றி இறக்கி பரிசோதனை செய்தோம். எங்கள் அணி சென்னை மற்றும் இந்திய மைதானங்களில் விளையாடுவதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் இந்த மைதானங்களுக்கு ஏற்றதாக மாற்றவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.