1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. rain in lucknow ground toss postponed

லக்னோவில் மழை.. சிஎஸ்கே போட்டி தொடங்குவதில் தாமதம்..!

ஐபிஎல்
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே லக்னோ மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் லக்னோவில் மழை பெய்து வருவதால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
லக்னோ மைதானத்தில் இன்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் கடந்த ஒரு மணி நேரமாக லக்னோ மைதானத்தில் மழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று மூன்று முப்பது மணிக்கு டாஸ் போடப்படும் என்றும் 3.45 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புள்ளி பட்டியல் பொறுத்தவரை சென்னை அணி மற்றும் லக்னோ அணி ஆகிய இரண்டுமே 10 புள்ளிகளுடன் தான் உள்ளது என்பதும் லக்னோ மூன்றாவது இடத்திலும் சென்னை நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணியை 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை நோக்கி செல்லும் என்பதால் இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளுமே தீவிரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
About Writer
Mahendran