1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (14:57 IST)

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா -மழையால் தாமதமான நான்காம் நாள் ஆட்டம்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வெற்றியை தென்னாபிரிக்க அணி நெருங்கிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்கள் தென்னாப்பிரிக்கா 229 ரன்கள் எடுத்திருந்த என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்கள் மட்டுமே எடுத்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து விட்டது என்பதும் இன்னும் வெற்றி பெற 122 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணி 8 விக்கெட் உள்ளது என்பதும் இதனால் அந்த அணி வெற்றியை நெருங்கி விட்டதாகவே கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று தொடங்க இருந்த நான்காம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாகியுள்ளது. இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.