செவ்வாய், 2 ஜூலை 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

மும்பை அணிக்கு 8வது தோல்வி: மீண்டு வர வாய்ப்பே இல்லையா?

mumbai
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 
 
ஏற்கனவே இந்த தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த நிலையில் நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் 8வது தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
 நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து 169 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் நன்றாக விளையாடிய போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து மும்பை அணி தோல்வி அடைந்தது
 
இந்த நிலையில் மொத்தம் உள்ள 14 போட்டிகளில் 8 போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடைந்ததை அடுத்து அந்த அணி மீண்டுவர வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது