1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 நவம்பர் 2021 (17:32 IST)

கோலி இப்படி சொல்ல கூடாது… கபில்தேவ் கண்டனம்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியது சரியானது இல்லை என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

நேற்றைய நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கோட்டைவிட்டது. இதனால் மோசமான தோல்வியைத் தழுவியது. தோல்விக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ‘உண்மையை சொல்லவேண்டுமென்றால் நாங்கள் தேவையான தைரியத்தோடு விளையாடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எங்கள் உடல்மொழி சரியில்லை. ஷாட் ஆடுவதா அல்லது வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில் இருந்தோம்.

இந்திய அணிக்காக ஆடும்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டும். நாங்கள் உற்று கவனிக்கப்படுகிறோம். டி 20 கிரிக்கெட்டை பொறுத்தவரை நம்பிக்கையோடு நாம் அடித்து ஆடவேண்டும். இன்னும் இந்த தொடரில் மீதம் கிரிக்கெட் உள்ளது.’ எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ‘ கோலி நாங்கள் தைரியமாக விளையாடவில்லை என்கிறார். கோலி போன்ற ஒரு வீரரே இப்படி சொன்னால் வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும். கோலியிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. கோலி ஒரு போராளி. அவருக்கு இப்போது ஏதோ அழுத்தம் இருப்பதாக நினைக்கிறேன்.  ஆனால் கோலி இப்படி பேசியிருப்பதி ஒட்டுமொத்த அணியின் மனநிலையைக் குலைக்கும்’ எனக் கூறியுள்ளார்.