வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (08:41 IST)

கே எல் ராகுலுக்கு ப்ரமோஷன் – பஞ்சாப் அணிக்கு கேப்டனாக நியமனம் !

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே எல் ராகுல் பார்ம் அவுட் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் உள்நாட்டுத் தொடர்களான விஜய் ஹசாரே, துலிப் கோப்பை தொடர்களில் கவனம் சிறப்பாக விளையாடியதால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இப்போது நடந்துவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரை கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனாக நியமனம் செய்துள்ளது அணி நிர்வாகம்.

ஐபிஎல் –ன் 13 ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு செயல்பட்டு வந்த அஸ்வின் டெல்லி அணிக்கு மாறியதால் அந்த அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து ராகுலிடம் அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான திறமைமிக்க வீரர்கள் இருந்தும் பஞ்சாப் அணியால் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பஞ்சாப் அணியால் 11 கோடி ரூபாய்க்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டார்.