1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு… ராகுலுக்கு வாய்ப்பு இல்லை!

நியுசிலாந்துக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடக்க உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து அணியுடனான போட்டிகளுக்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. நாளை மறுநாள் தொடங்க உள்ள போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ராகுல், மயங்க் அகர்வால், வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்திய அணி:-

விராட் கோலி (கேப்டன்), அஜாங்கியா ராஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருதமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஹனும விஹாரி, ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்புரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்