வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 4 மே 2018 (12:24 IST)

அடிபட்ட புலி என்ன செய்யும் தெரியுமா? ஹர்பஜன் சொல்வதை கேளுங்கள்...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச முடிவு செய்தது. 
 
முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. இதனால், 17.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இதனால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. சென்னையின் தோல்வி குறித்து சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு பினவருமாறு...