தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- களத்தில் கண்ணீர் விட்ட இந்திய ஹாக்கி வீராங்கனைகள்
- இந்தியா டூ அபுதாபி விமான சேவை – 10ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிப்பு!
- இந்திய மகளிர் ஹாக்கி அணி குறித்து பெருமைப்படுகிறோம் - மோடி டிவிட்!!
- ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: போராடி தோல்வி அடைந்த இந்திய அணி!
டோக்கியோ ஒலிம்பிக்; மல்யுத்த போட்டியில் அரையிறுதியில் இந்திய வீரர்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுவரையிலான போட்டிகளில் இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியின் கால் இறுதி போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஈரான் நாட்டு வீரரான சியாசி செகாவை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதனால் பஜ்ரங் புனியா அரையிறுத்திக்கு தகுதி பெற்றுள்ளார்.
