1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Australia falls after warner wicket

சிறப்பான தொடக்கத்துக்குப் பின் தடுமாறும் ஆஸி பேட்ஸ்மேன்கள்!

ஆஸ்திரேலியா
ஆஷஸ் தொடரின் இரண்டாம் நாளில் ஆஸி அணி 200 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து ஆடிவருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதும் அந்த அணி 50 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்ட நிலையில் இடைவேளைக்கு பின்னர் திடீரென கனமழை பெய்த காரணத்தினால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் ஆஸி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷான் ஆகியோர் அமைத்துக் கொடுத்தனர். ஆனால் அவர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அவுட்டானதில் இப்போது 5 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
 
அடுத்த கட்டுரையில்
#ShameonBCCI - அதிருப்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!