1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:31 IST)

பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்!

jail
பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்!
பிளஸ் டூ மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்ற 21 வயது வாலிபர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இந்த காதல் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே மாணவிக்கு மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர்
 
இதனை அடுத்து அஜித் மற்றும் பிளஸ் டூ மாணவி இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து மூன்று நாள் குடும்பம் நடத்தி உள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அஜித் கைது செய்யப்பட்டார்
 
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட.து இந்த தீர்ப்பில் அஜித்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் அவதாரம் விதிக்கப்பட்டது
 
18 வயதுக்கு குறைவான பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது