1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Young girl murederd in Thirupur forest area

நடுக்காட்டில் பிணமாக வயசு பெண்: யார் என்றே தெரியாமல் போலீசார் திணறல்!

காட்டுப்பகுதி
திருப்பூர் பகுதியில் யார் என்றே இதுவரை தெரியாமல் இளம்பெண்ணின் சடல் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
 
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
தகவல் அறிந்து வந்த போலீஸார் பெண்ணின் தலையில் யாரோ கல்லை போட்டு கொன்றுள்ளதாக தெரிந்துக்கொண்டு, அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகிறார்கள். 
 
ஆனால், இதில் சிக்கல் என்னவெனில் அந்த பெண் யார் என்பதெ எஇதுவரை தெரியவில்லையாம். ஆனால், அந்த காட்டுப்பகுதியில் மேற்கொண்ட சோதனையில் ஒரு ஸ்கூட்டி நின்று கொண்டிருந்தது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த வண்டி நம்பரை துப்பாக வைத்து போலீஸார் இந்த கொலைல் சம்பவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
இரு நாட்டு உறவில் பாலமாக இருக்கும் யீயீ பாண்டா