1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Woman harassed by her gym trainer

அனுமதி இல்லாமல் திறக்கப்பட்ட ஜிம்… பாலியல் தொல்லைக் கொடுத்த டிரெய்னர்!

ஜிம்
சென்னையில் அனுமதி இன்றி ஜிம் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்குக் காரணமாக உடல் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தாம்பரம் கேம்ப் சாலையில் இருக்கும் அந்த ஜிம்மில் பின்புறக் கதவு வழியாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு பயிற்சி செய்துள்ளனர். இந்நிலையில் இப்படி பயிற்சிக்கு வந்த ஒரு பெண்ணிடம் அந்த ஜிம்மின் பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்து எல்லை மீறியதாக அவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதையடுத்து இப்போது பரங்கிமலை காவல் நிலையத்தில் பிரேம் ஆனந்த் மீது புகாரும் அளித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
ஹஜ் புனித பயணம்… வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை – சவுதி அரேபியா அறிவிப்பு!