வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (16:36 IST)

இந்திய அணிக்கு வெற்றியைக் கற்றுக்கொடுத்தவர் கிரேக் சேப்பல்தான்… ரெய்னா புகழாரம்!

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் குறித்து சுரேஷ் ரெய்னா தனது சுயசரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார்.

இந்திய அணிக்கு நியமிக்கப்பட்ட பயிற்சியாளர்களிலேயே அதிக சர்ச்சையை எதிர்கொண்டவர் என்றால் அது கிரேக் சேப்பல்தான். அவரை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க கோரிய கங்குலியுடன் அவருக்கு பெரும் பனிப்போரே நடந்தது. டிராவிட்டைக் கேப்டனாக்கினார். ஆனால் அவருக்கு சச்சின் போன்ற மூத்த வீரர்கள் எல்லாம் ஒத்துழைக்கவில்லை என்று கூறினார். இதுபோல பல சர்ச்சைகளுக்குப் பின்னர் அவர் பதவி விலகினார்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனது சுயசரிதைப் புத்தகத்தில் ‘இந்திய அணிக்கு வெற்றி பெறுவது என்பதையும் அதன் மகத்துவத்தையும் கற்றுக்கொடுத்தார். அவர் விதைதததைதான் நாம் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பழமாக அறுவடை செய்தோம். அவரிடம் இருந்து இளம் வீரர்கள் ஏராளமாகக் கற்றோம்’ எனக் கூறியுள்ளார்.