1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Will the next election be held Stalins question

அடுத்தகட்ட தேர்தலை நடத்துவார்களா ? ஸ்டாலின் கேள்வி !

அதிமுக
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்த்தால் அடுத்தகட்ட தேர்தலை நடத்துவார்களா என சந்தேகம் வருகிறது என எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இதில், அதிமுக மற்றும் திமுக கட்சிகள் சரிசமாக வெற்றி பெற்றுள்ளனர்.
 
இந்நிலையில், சென்னை கொளத்தூர் ஜெயின் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட  திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து கூறியுள்ளதாவது :
 
சிசிடிவி மட்டும் இல்லையென்றால் நாம் உள்ளாட்சித் தேர்தலில் இத்தனை வெற்றிருக்க முடியுமா என தெரிவித்தார்.
 
மேலும், திமுக பெறும் வெற்றிகளைக் கூட ஆளுங்கட்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை ;நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றோம் என்றால் நீங்கள் தேனியில் அல்வா கொடுத்து வென்றீர்களா என கேள்வி எழுப்பினார்.
About Writer
sinoj kiyan
அடுத்த கட்டுரையில்
ஜனவரி 1 டூ டிசம்பர் 31 வரை லீவ் கேட்க வேண்டியதானே: எஸ்வி சேகர் கிண்டல்