1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Wife committed suicide after knowing her husband affair

என் அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் ! மனைவியிடம் கணவன் சொன்ன வார்த்தை !

போலிஸ்
மனைவியுடன் வாழப் பிடிக்காமல் அண்ணியுடன் தகாத உறவு வைத்திருந்ததால் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் ஒடியடி குப்பம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் காவல்துறை அதிகாரி அருள். இவருக்கும் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவரும் சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென ராஜேஸ்வரி தனது வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் போலிஸாரைத் தொடர்புகொண்ட ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் தொடர்புகொண்டு அக்காவின் மரணத்துக்கு அவரின் கணவர் அருள்தான் எனக் கூறியுள்ளார்.

அவர் ‘ எனது அக்கா சில தினங்களுக்கு முன்னர் என்னிடம் பேசியபோது அவரது கணவருக்கும் அவரது அண்ணிக்கும் தகாத உறவு இருந்ததாக சொன்னார். எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் என சொல்லி மாமா அடிக்கடி அக்காவைக் கொடுமை படுத்தியுள்ளார். ’எனக் கூறி போலிஸாரை திடுக்கிட வைத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சந்தேகப்படும்படி பேசிக்கொண்டிருந்த 4 பேர்.. பயங்காரவாதிகளுடன் தொடர்பு..! மடக்கி பிடித்த போலீஸ்