தொடர்புடைய செய்திகள்
- 5 ஆண்டுகளில் எவ்வளவு தேர்தல் பத்திரங்கள் விற்பனை? வெளியான தகவல்
- பாஜக கூட்டணியில் பாமக.. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக தகவல்.. எத்தனை தொகுதிகள்?
- இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயம் போட்டியிடுவோம்! மீண்டும் உறுதி செய்த ஓபிஎஸ்
- குஷ்பு,அண்ணாமலையின் உருவ படங்களை தலை கீழாக பிடித்து-திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
- பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.. எடப்பாடி பழனிசாமியை மிரட்டியதா பாஜக?
பாஜகவில் இணைந்தது ஏன்?- நடிகர் சரத்குமார் விளக்கம்
நரேந்திரமோடி 3 வது முறையாக பிரதமராக வேண்டும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் வாக்குறுதியை தயார் செய்து வருகிறது.
இன்னும் சில நாட்களே தேர்தலுக்கு உள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ள நிலையில், அவரது கட்சியைச் சேந்த சிலர் இதுகுறித்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நரேந்திரமோடி 3 வது முறையாக பிரதமராக வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: '' நாடு செழிக்க நரேந்திரமோடி 3 வது முறையாக பிரதமராக வேண்டும். பாஜகவில் பொறுப்புக்காக இணையவில்லை. பொறுப்புடன் நடந்துகொள்வதற்காக இணைந்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், '' பிரதமர் மோடி மீண்டும் அட்சி அமைப்பதற்கு பாஜகவுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்படக்கூடாது என சிந்தித்தேன். 2026-ல் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகத்தோன்றியது. எனது 26 ஆண்டு அரசியல் அனுபவத்தை தேச வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தேன். சமகவில் இருந்து பாஜகவில் சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை செய்யப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதாரணி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
