1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ops says about two leaves symbol

இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயம் போட்டியிடுவோம்! மீண்டும் உறுதி செய்த ஓபிஎஸ்

இரட்டை இலை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் சொல்லும் பேட்டி அளித்தபோது இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு தான் கிடைக்கும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது வரும் பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று மீண்டும் உறுதிபட கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைந்து போட்டியிடப் போவதாகவும் அவருக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்க பாஜக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழகம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்ததாகவும், இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம் என்றும் இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதில் தற்காலிகமாக தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் இறுதி தீர்ப்பு எங்கள் அணிக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பாஜக கூட்டணியில் பாமக.. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக தகவல்.. எத்தனை தொகுதிகள்?