1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (19:33 IST)

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 எப்போது? ஆர்.எஸ். பாரதி தகவல்

தலைமையிலான
திமுக அரசு ஆட்சி  நடந்து வருகிறது. கடந்தாண்டு தேர்தல் அறிக்கையில் திமுகவினர் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்காக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்தது.

இதில்,  இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இப்பட்ஜெட்டில் இடம்பெறும் எனக் கூறப்பட்டது.

இதனால் மக்கள் எப்போது, இந்தத் தொகை வழங்கப்படும் என ஆர்வமுடம் உள்ளனர். இந்த நிலையில்,திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி,அதிமுக் ஆட்சியில் ரேசன் கார்டுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதைச் ச்அரிசெய்யும் பணி நடக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக முடிந்த பின்ம் அண்ணா பிறந்த நாள் அல்லது கருணாநிதி பிறந்த நாளில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.