வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (12:50 IST)

உள்நோக்கத்துடன் பேசவில்லை; ஆர் எஸ் பாரதி வழக்கு ரத்து! – நீதிமன்றம் உத்தரவு!

பட்டியலினத்தவரை இகழும் விதமாக பேசியதாக திமுக ஆர்.எஸ்.பாரதி மீது தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றங்களில் பட்டியலினத்தவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதி இகழ்வு படுத்தும் உள்நோக்கில் அவ்வாறாக பேசவில்லை என்ற விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.