1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு: வைகை அணையில் நீர் திறப்பு!

kallalagar
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் 16ஆம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து வைகை அணையில் நீர் திறக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மதுரையில் கடந்த சில நாட்களாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளையும் மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து வைகை அணையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் அந்த தண்ணீர் மதுரைக்கு வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது
 
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ளதை அடுத்து வைகை அணையில் நீர் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்