தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: விருதுநகர் சம்பவம் குறித்து விஜயகாந்த்!
- பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு: விஜயகாந்த் கண்டனம்
- மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜயகாந்த்… வைரல் புகைப்படம்!
- தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்தவேண்டும்- விஜயகாந்த்
- அண்ணா பல்கலை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை
நூல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறுக - விஜயகாந்த்
நூல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
பின்னலாடைகளின் மூலப் பொருளான நூலின் விலை அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் நூல் விலை 150 ரூபாய் வரை உயர்ந்து சுமார் 350 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுபோன்ற சூழலில் நூலின் மேலும் 30 ரூபாய் அதிகரித்திருப்பது ஏற்றுமதியாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் நூல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரும் மையமாக சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நகரமாக திருப்பூர் விளங்குகிறது. பின்னலாடை தொழிலை முடக்கும் வகையில் முக்கிய மூலப் பொருளான நூலின் விலை அண்மைக்காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என கோரியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
