தொடர்புடைய செய்திகள்
- தவெக மாநாடு: பெரியார் வேணும்.. கடவுள் மறுப்பு வேணாம்! - பெரியார் கொள்கை குறித்து விஜய் பேச்சு!
- தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் எதனால்? விஜய் பேச்சு
- மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள்: விஜய்
- குழந்தையும் பாம்பும்..! அந்த பாம்பு யார்? மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
- தமிழே ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி.. தவெகவின் செயல் திட்டம்
தவெகவின் 5 கொள்கை தலைவர்கள் இவர்கள் தான்.. விஜய் அறிவிப்பு..!
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று நடைபெற்ற நிலையில், அதில் பேசிய விஜய், தனது கட்சியின் 5 கொள்கை தலைவர்களைப் பற்றி கூறியுள்ளார்.
முதலாவது, பெரியார்: பெரியார் என்றால் கடவுள் மறுப்பு கொள்கை என்று சிலர் பேசுகின்றனர். ஆனால் நாங்கள் கடவுள் மறுப்பு கொள்கையை பேச மாட்டோம்; அனைத்து மதங்களுக்கும் ஆதரவாகவும் அரணாகவும் இருப்போம். அதே நேரத்தில், பெரியார் காட்டிய பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமுதாய சீர்திருத்தம், சமூகநீதி போன்ற நிலைப்பாடுகளை முன்னேற்றுவோம்.
அடுத்ததாக, காமராஜர்: கல்விக்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் உழைத்த உத்தமர். மதச்சார்பின்மையை ஆழமாக விதைத்தவர்; நேர்மையான நிர்வாக செயல்முறைக்கு உதாரணமானவர். அவரை எங்கள் கொள்கை தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்.
அடுத்ததாக, அண்ணல் அம்பேத்கர்: சமூகநீதியை நிலைநாட்டியவர் என்பதால் அவரையும் எங்கள் கொள்கை தலைவராக அறிவிக்கிறோம்.
சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ராணி வேலு நாச்சியார்: தனது கணவரை இழந்த பிறகும் மண்ணைக் காக்க போர்க்களம் புகுந்த புரட்சியாளர்; இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண் போராளி என்பதால், அவரை நம்முடைய கொள்கை விளக்க தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள்: நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி, குழந்தை பெற்று மீண்டும் சிறைக்கு சென்றவர்.
இந்த ஐந்து தலைவர்களையும் எங்கள் கட்சியின் கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொள்வதை பெருமையாக நினைக்கிறோம் என்று விஜய் பேசினார்.
Edited by Siva
