தொடர்புடைய செய்திகள்
- எங்களுக்கும், அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது; எடப்பாடி பழனிசாமி
- நாம் பிரிந்தால் எதிரிகளுக்கு வெற்றி கிடைக்கும்: அமித்ஷாவை சந்தித்த பின் ஈபிஎஸ் பேட்டி..!
- அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாக்குவது மிகுந்த வேதனை -எடப்பாடி பழனிசாமி
- அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆலோசனை.
- முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள்
திமுக ஆட்சியை திமுகவினரே விரும்பவில்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து
திமுக ஆட்சியை எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் மட்டும் இன்றி திமுகவினரே விரும்பவில்லை என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது திமுக ஆட்சியை திமுக கட்சியினரே விரும்பவில்லை என்றும் கோவையில் கஞ்சா பழக்கம் அதிகரித்துவிட்டது என்றும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது என்றும் தெரிவித்தார்.
கோவையில் மட்டும் 1250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறிய எஸ்பி வேலுமணி தொண்டாமுத்தூரில் பேருந்து முனையம் அமைக்க அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கினோம் என்றும் ஆனால் திமுக அரசு அந்த நிதியை வீணாக்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.
தொண்டாமுத்தூர் பேருந்து நிலையம் பணிகள் முறையாக நடக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
