1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Velmurugan protest in governor house

ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு

ஆளுனர்
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்படும் என தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக சட்டசபையில் ஏற்பட்ட நீட் விலக்கு மசோதாவை நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி  திருப்பி அனுப்பினார் 
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளுநரை திரும்ப அழைக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் கொடுத்தனர் 
 
இந்த நிலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்
 
இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு அவரும் அவருடைய கட்சி தொண்டர்களும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
முதல்வர் கையால் விருது பெற்றவருக்கு திமுகவில் சீட்: உள்ளாட்சி தேர்தலில் களமிறங்குகிறார்!