வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (08:43 IST)

ஜெயலலிதாவுக்கு விழா, வீரப்பனுக்கு தடையா? முத்துலட்சுமி கேள்வி

சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு விழா கொண்டாட தமிழக அரசு தடை போட்டிருக்கும் நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி இதுகுறித்து ஆவேசமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு விழா கொண்டாடும் போது எனது கணவர் வீரப்பனுக்கு விழா கொண்டாட தடை போடுவது ஏன்? என தமிழக அரசுக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் இந்த கேள்விக்கு சமூக வலைத்தளத்தில் ஒருசிலர் எதிர்ப்பும் பெரும்பாலானோர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வீரப்பனின் 14வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வீரப்பனின் நினைவிடத்தில் பலர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.