செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 அக்டோபர் 2018 (15:47 IST)

ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்பனைக்கு: தமிழக அரசு முடிவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெல் 412 இ.பி. ரக ஹெலிகாப்டரை பயன்படுத்து வந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னரும் இந்த ஹெலிகாப்டர் பயன்படுட்தப்பட்டு வந்தது.
 
சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஹெலிகாப்டர் பழுதடைந்தது. பழுதை சீர் செய்ய நிறைய செலவு ஆகும் என்பதால் அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்து விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
 
இந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்ய நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் ஹெலிகாப்டர் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.