1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vandhe bharath train cellphone blast

சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயிலில் திடீரென கேட்ட சத்தம்.. பயணிகள் அலறல்..!

சென்னை
சென்னை மைசூர் வந்தே பாரத் ரயிலில் திடீரென சத்தம் கேட்டதால் பயணிகள் அலறி அடித்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை மைசூர் வந்தே பாரத் ரயில் இன்று ஆம்பூர் அருகே  சென்று கொண்டிருந்த போது பயணி ஒருவரின் செல்போன் திடீரென வெடித்ததாக தெரிகிறது. சி11 என்ற பெட்டியில் பயணம் செய்த பயணியின் செல்போன் சார்ஜில் போடப்பட்டிருந்த நிலையில் அந்த செல்போன் திடீரென வெடித்தது.
 
மேலும் செல்போன் வெடித்து புகை வந்ததால் பயணிகள் அலறி அடித்து ரயிலை நிறுத்த முயற்சி செய்தனர். இதனை அடுத்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
 
அதன் பின்னர் பெட்டிகளின் கதவு திறக்கப்பட்டு முழுவதும் புகை வெளியேற்றப்பட்டது பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற பின்னர் 35 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றதாக தெரிகிறது.
 
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. செல்போன் வெடித்த சம்பவம் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இன்று மாலை 9 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!