1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vanathi srinivasan comment about nainar nagendiran

நயினர் நாகேந்திரன் அப்படி பேசமாட்டார்!.. வானதி சீனிவாசன் கருத்து!...

naingar nagendiran
இன்று செய்தியாளரிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.. திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்.. குடும்பஸ்தனாக இருந்து அரசியல் செய்ய வேண்டும்.. அப்படி வெளிவந்து பேசினால்தான் இதற்கு முன் வந்த அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பது அவருக்கு தெரியும்’ என்று பேசியிருந்தார்..

விஜயை திரிஷாவுடன் இணைத்து அவர் பேசியதை பலரும் கண்டித்து வருகிறார்கள்.. தனிப்பட்ட ஒருவரை, அரசியல் இல்லாத ஒருவரை பற்றி இப்படி பேசக்கூடாது’ என்று டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் சொல்லி வருகிறார்கள்..

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ‘நயினார் நாகேந்திரன் எப்போதும் சாந்தமாக பேசும் நபர். ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை. அவரை சந்திக்கும்போது எனது கருத்தை அவரிடம் தெரிவிப்பேன்’ என கூறியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்.. கனமழை பெய்யுமா?