தொடர்புடைய செய்திகள்
- கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் தடுப்பூசிகள்!
- இந்தியாவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி சோதனை! – கோபர்வேக்ஸுக்கு அனுமதி!
- தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை! – மதுரை மாநகராட்சி எச்சரிக்கை!
- தடுப்பூசிக்கெல்லாம் அடங்காது? உலகை உலுக்கும் “மு” வைரஸ்! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
- தடுப்பூசியை தாண்டி தாக்கும் புதிய வைரஸ்
ஆப்பு வைத்த ஆட்சியர் - வெறும் கையோடு திரும்பிய மதுப்பிரியர்கள்!
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்று நீலகிரி கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி, நீலகிரியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்க வரும் நபர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளதற்கான சான்றிதழ் அல்லது செல்போனில் பதிவிறக்கம் செய்த சான்றிதழை காட்ட வேண்டும். சான்றிதழை காட்டியவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்படவில்லை. மேலும் அவர்களது பெயர், செல்போன் எண், முகவரி, ஆதார் எண் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
