ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (23:12 IST)

தடுப்பூசியை தாண்டி தாக்கும் புதிய வைரஸ்

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர்  நிறுவனம்.

இந்நிலையில்,  கொலம்பியாவில் 6 மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்ட புதிய வகைக் கொரோனாவான பி 1.621 என்ற புதிய கொரொனா வைரஸ் வகைக்கு  Mu என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

இந்த வைர்ஸ் வேகமாகத் தாக்கும் எனவும் இது தடுப்பூசியை தாண்டியை மனிதர்களைத் தாக்கும் என எச்சரித்துள்ளது.