1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (17:19 IST)

மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: ஒரே நாளில் இரண்டு எம்.எல்.ஏக்கள் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினமும் சுமார் 4000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் அவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்ததாகவும், அவரை அடுத்து அவருடைய மனைவி மகனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மூவரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு அவர்களுக்கும் கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் 2 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுவதாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.குமரகுரு அவர்கள் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சதன் பிரபாகர் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய செய்தி அறிந்து அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.