1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhyanidhi Stalin tweeted awkard image

மகிழ்ச்சியை வெளிப்படுத்த அநாகரீக டுவீட் செய்த உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்
2ஜி வழக்கு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததையடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த தனது டுவிட்டர் பக்கத்தில் அநாகரீகமாக டுவீட் செய்துள்ளார்.

 
2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். பல அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக செயல் தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை டுவிட்டரில் அநாகரீக முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
 
இவரது கருத்துக்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த் டுவீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு யாருக்கெல்லாம் எரிகிறதோ அவர்களுக்கு பர்னால் என்ற வசனத்துடன் அபாச புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஆர்.கே.நகரில் 77% வாக்குப்பதிவு