1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (20:10 IST)

உதயநிதி எம்.எல்.ஏவிடம் இன்று நிதியளித்தவர்களின் விபரங்கள்!

சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி அவர்களிடம் தினந்தோறும் பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றனர். இன்று உதயநிதியுடன் நிதிஉதவி கொடுத்தவர்களின் விவரங்களை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது:
 
ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - மகேஷ்வரி தம்பதியின் மகன் ரித்திஷ் சந்திரன் கொரோனா தடுப்பு பணிக்காக தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். தம்பிக்கு என் அன்பும், நன்றியும்
 
திருவல்லிக்கேணி, வி.எம் தெரு பகுதியைச் சேர்ந்த ஶ்ரீதர் - ரம்யா தம்பதியின் மகன் தேஜேஷ்வரன் தன்னுடைய உண்டியல் சேமிப்பை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
தென்காசி மாவட்டம், கடையநல்லூரை சேர்ந்த சகோதரர் அரஃபா வஹாப் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கும், கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிக்காக கழக இளைஞரணி அறக்கட்டளைக்கும் தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை இன்று என்னிடம் வழங்கினார். நன்றி.
 
கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு, நாமக்கல் மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஸர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை இன்று என்னிடம் வழங்கினர். அவர்களுக்கு நன்றி.
 
தமிழ்நாடு பேரூராட்சிகள் துப்புரவு மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில்  கொரோனா தடுப்புக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை சங்க நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு என்னிடம் வழங்கினர்.