தொடர்புடைய செய்திகள்
- நடிகை சோனா வீட்டில் திருட முயன்ற இருவர் கைது.. போலீசார் தீவிர விசாரணை..!
- 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!
- காதலருடன் இரவில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் கொடுமை: 3 பேர் கைது..!
- இளமை திரும்புதே..! 60 வயது நபரை 25 வயது நபராக ஆக்க முடியும் என மோசடி! - தம்பதிக்கு வலைவிரித்த போலீஸ்!
- மகள் விபச்சாரம் செய்ததாக மோசடி ஃபோன் கால்! மாரடைப்பால் தாய் பலி! - அதிர வைத்த மோசடி சம்பவம்!
மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!
மோசடி வழக்கில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து சில மணி நிமிடங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக தரப்பி வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம் குளித்தலையில், மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கைது செய்யப்பட்ட ராஜாவுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அவருக்கு தமிழக வெற்றி கழகத்தில் அல்லது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதுவரை அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran
