1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (20:51 IST)

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பதும் ஆனால் அதே நேரத்தில் தற்போது மழை குறைந்து விட்ட இடத்தில் இன்று கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளையும் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகா மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது