தொடர்புடைய செய்திகள்
- வீரர்களின் வேலைப்பளுவை கவனத்தில் கொள்ள வேண்டும்- ராகுல் டிராவிட்
- உலகில் பணக்கார நாடு: அமெரிக்காவை முந்தி சீனா முதலிடம்
- எவரையும் தாக்கிப் பேசக் கூடாது- ’ஜெய்பீம்’ பட விவகார்த்தில் சந்தானம் பதில்!
- கோவை மாணவி தற்கொலை விவகாரம்: யூடியூப் சேனல்கள் மீது வழக்குப் பதிவு
- பார்வதி அம்மாளை சந்தித்து நிதி உதவி செய்த நடிகர் சூர்யா!
மழைவெள்ளம் பாதிப்பு ; மத்திய அரசிடம் 2,079 கோடி கேட்கும் தமிழக அரசு!
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் டி.ஆர்.பாலு மத்திய அரசிடம் ரூ.2,079 கோடி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழையால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னையில் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.2,079 கோடி வழங்குமாறும், அதில் ரூ.550 கோடியை உடனடியாக வழங்குமாறும் அமைச்சர் டி.ஆர்.பாலு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பாலு தமிழகத்தில் கடந்த 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழக்கத்தை விட 49.6 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும், இதனால் 49,757 ஹெக்டேர் விவசாயம் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
